12 15
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

Share

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

ஏர் அஸ்தானா(Air Astana )விமான நிறுவனம் 2024/2025 குளிர்காலத்தை ஒட்டி இலங்கைக்கான (sri lanka) நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

அதன் தொடக்க விமானம் நேற்று (16)திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சேவீசஸ் ( இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வந்திறங்கிய முதல் விமானம் நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பயணிகள் மற்றும் பணியாளர்களும் வரவேற்கப்பட்டனர்.

இந்த முதல் விமானத்தில் 150 பயணிகளும் 08 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானங்கள் ஒவ்வொரு வாரமும் 04 நாட்களில் கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...