6 46
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது பாயப்போகும் சட்ட நடவடிக்கை

Share

நாடாளுமன்ற தேர்தல் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது பாயப்போகும் சட்ட நடவடிக்கை

டிசம்பர் 6 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு அறிக்கையை (campaign expenditure reports ) சமர்ப்பிக்கத் தவறிய 1,042 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் (EC) தயாராகி வருகிறது.

2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், அனைத்து நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களும், தேசியப் பட்டியல் வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரச் செலவுகள், நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு 6 டிசம்பர் நள்ளிரவு 12 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின்படி, அனைத்து 22 தேர்தல் மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 8,361 நாடாளுமன்ற வேட்பாளர்களில், 7,412 பேர் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்துள்ளனர். தேசியப் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 527, அவர்களில் 434 பேர் மட்டுமே தங்கள் செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அதன்படி, மொத்தம் 1,042 வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் உரிய சட்ட விதிகளுக்கு இணங்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது செலவின அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது, ஆனால் 493 மட்டுமே அவ்வாறு செய்திருந்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க(R.M.A.L. Rathnayake) , அதே குற்றத்தைச் செய்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கியதைப் போன்று, தேவையான சமர்ப்பிப்புகளைச் செய்யத் தவறிய நாடாளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

“செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்கள் குறித்து காவல்துறைக்கு நாங்கள் தெரிவிப்போம். அதன் பிறகு சட்டமா அதிபரின் (ஏஜி) ஆலோசனையின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 14 அன்று நடைபெற்றது. வேட்பாளர்கள், தேசியப் பட்டியல் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தலைத் தொடர்ந்து மேற்படி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...