11 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

Share

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (HC) தெரிவித்துள்ளது.

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயம் டிசம்பர் 15 முதல் 17 வரை நீடிக்கும். அதன்படி, இன்று (16) முன்னதாக புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திசாநாயக்கவை பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

முன்னதாக நேற்று(15)தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைநகர் டெல்லியை சென்றடைந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...