11 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

Share

ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடி முக்கிய பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (HC) தெரிவித்துள்ளது.

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயம் டிசம்பர் 15 முதல் 17 வரை நீடிக்கும். அதன்படி, இன்று (16) முன்னதாக புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திசாநாயக்கவை பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

முன்னதாக நேற்று(15)தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைநகர் டெல்லியை சென்றடைந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....