2 13
இலங்கைசெய்திகள்

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

Share

அசோக ரன்வல எம்.பி பதவியிலிருந்தும் விலக வேண்டும் : வெளியான தகவல்

புதிய சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்தும் பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஒரு பொறுப்பான கட்சியாக செயற்பட வேண்டும். வெளிப்படையாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது.

இவர்கள் செய்தது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது தொடர்பாக எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

செவ்வாய்கிழமை (17) எதிர்க்கட்சியிலிருந்தும் சபாநாயகர் பதவிக்காக பெயர் ஒன்றை முன்மொழிவோம் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அடுத்த சபாநாயகராக திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் நபரின் மீதும் நம்பிக்கை இல்லை. இதில் பலத்த சந்தேகம் உள்ளது.

அடுத்த முறை நம்மை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாற்றப்பட்டு அவரை ஆதரித்தோம். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தினத்தில் எதிர்க்கட்சியில் இருந்தும் பெயரை கண்டிப்பாக முன்மொழிவோம். ஆனால் முன்மொழியப்படுபவர் தவறான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவரில்லை” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...