3 1 4
இலங்கைசெய்திகள்

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

Share

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

Three Killed And Dozens Injured Bomb Thai Festival

தாய்லாந்தில்(Thailand) இடம்பெற்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்த திருவிழா நடைபெற்றது.

இதன்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...