20 12
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : வெளியான தகவல்

Share

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : வெளியான தகவல்

ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க (Anukumara Dissanayake) எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு (India) வருகை தருவார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும் என இந்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அநுகுமார திசாநாயக்க, தனது விஜயத்தின் போது, இருதரப்பு சந்திப்புகள் இந்திய குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீடு மற்றும் வணிக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக புதுடில்லியில் (New Delhi) நடைபெறும் வணிக நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர் புத்த கயாவுக்கும் செல்வுள்ள நிலையில், ஜனாதிபதி திசாநாயக்காவின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...