18 15
இலங்கைசெய்திகள்

1996 உலகக்கிண்ண வெற்றியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை முதலீடு

Share

1996 உலகக்கிண்ண வெற்றியாளர்களால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை முதலீடு

1996 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்திய முதலீட்டில் கட்டப்படவுள்ள 42 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்றையதினம்(12) அடிக்கல் நாட்டப்பட்டது.

பெலவத்தையில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள காணியில், 240 வீட்டுத் தொகுதிகள் இடம்பெறும், ஒவ்வொரு தளத்திற்கும், இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் உள்ளிடப்பட்டுள்ளது.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க(Arjuna Ranatunga) இந்த கட்டடத்துக்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளார்.

1996ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga), உலகக்கிண்ண அணியில் பங்கேற்ற 14 பேருக்கும் தலா பத்து பேர்ச்சஸ் காணியை வழங்கினார்.

இந்தநிலையில், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இடத்தில் 42 மாடி அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க ஒரு இந்திய முதலீட்டாளரை கண்டுபிடித்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் 30 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வரமுடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1996 உலகக்கிண்ண அணி உறுப்பினர்களான அரவிந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, ரொமேஸ் களுவிதாரண மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...