19 13
இலங்கைசெய்திகள்

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

Share

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய இராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் சிரியாவை விட்டு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார்.

ஆட்சி கவிழ்க்கப்பட்டதை சில இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் கொண்டாடிய அதே வேளையில் தலைநகர் டமாஸ்கஸில் குழப்பமும் பதற்றமும் நீடித்தது.

வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியுடன் ஓடியது முதல் ஜனாதிபதி அசாத்தின் வீட்டிற்குள் புகுந்து சிலர் சூறையாடுவது வரையிலான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இணையத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் இளைய சகோதரர் மகேர் அசாத்தின் பங்களாவிற்கு கீழ் கட்டப்பட்டு இருக்கும் ரகசிய பதுங்கு குழி காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில், கதவு ஒன்று திறக்கப்படும் போது நீண்ட மற்றும் செங்குத்தான பல படிக்கட்டுகள் கொண்ட சுரங்கப்பாதை அமைப்பு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிசவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கப்பாதையின் அடிப்பகுதியில் பல அறைகள் இணைக்கப்பட்டு உள்ளதுடன் அதில் ஒரு அறையில் பிளாஸ்டிக் பெட்டிகள், பிரீஃப்கேஸ்கள் மற்றும் இழுப்பறைகள் ஆகியவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...