19 13
இலங்கைசெய்திகள்

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

Share

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய இராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் சிரியாவை விட்டு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார்.

ஆட்சி கவிழ்க்கப்பட்டதை சில இஸ்லாமிய அரசு ஆதரவாளர்கள் கொண்டாடிய அதே வேளையில் தலைநகர் டமாஸ்கஸில் குழப்பமும் பதற்றமும் நீடித்தது.

வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியுடன் ஓடியது முதல் ஜனாதிபதி அசாத்தின் வீட்டிற்குள் புகுந்து சிலர் சூறையாடுவது வரையிலான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இணையத்தில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் இளைய சகோதரர் மகேர் அசாத்தின் பங்களாவிற்கு கீழ் கட்டப்பட்டு இருக்கும் ரகசிய பதுங்கு குழி காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில், கதவு ஒன்று திறக்கப்படும் போது நீண்ட மற்றும் செங்குத்தான பல படிக்கட்டுகள் கொண்ட சுரங்கப்பாதை அமைப்பு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிசவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கப்பாதையின் அடிப்பகுதியில் பல அறைகள் இணைக்கப்பட்டு உள்ளதுடன் அதில் ஒரு அறையில் பிளாஸ்டிக் பெட்டிகள், பிரீஃப்கேஸ்கள் மற்றும் இழுப்பறைகள் ஆகியவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...