22 7
ஏனையவை

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

Share

மட்டக்களப்பு – கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது

விபத்து ஒன்று தொடர்பில் கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரி செலுத்திய ஜீப்வண்டி நேற்றையதினம் மோதியுள்ள நிலையில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதையடுத்து அவருக்கு இரவு போசனம் வழங்கி பிரியாவிடை செய்யும் நிகழ்வு பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

அதில் மாவட்டதிலுள்ள காவல்நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரவு போசன நிகழவுக்கு கரடியனாறு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு சொந்தமான ஜீப்வண்டியில் தனியாக சென்று இரவு 10.00 மணியளவில் மீண்டும் கரடியனாறு காவல்நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது காயங்குடா பகுதியில் பிரதான வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார்.

இதில் பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற காவல்துறை பொறுப்பதிகாரியும் செங்கலடி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இன்று (8) காலை சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இதன்படி, குறித்த விபத்து தொடர்பாக கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்து அவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...