24 8
இலங்கைசெய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அதிகரித்த சுவிட்சர்லாந்து கல்விநிறுவனம்

Share

சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அதிகரித்த சுவிட்சர்லாந்து கல்விநிறுவனம்

சுவிட்சர்லாந்தில்(Switzerland) சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா போன்ற நாடுகள் உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை வழக்கமாகவே கொண்டுள்ளன.

அந்த வகையில், தற்போது சுவிட்சர்லாந்தின் The Federal Institutes of Technology (ETH) என்னும் கல்வி நிறுவனம், வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தற்போது 730 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தும் வெளிநாட்டு மாணவர்கள், 2025ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் துவங்கும் செமஸ்டர் முதல், 2.190 சுவிஸ் ஃப்ராங்குகள் கல்விக்கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரிச்சிலுள்ள ETH கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, சுமார் 40 சதவிகித மாணவ மாணவியர் வெளிநாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கல்வி கற்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...