Arrested 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உண்டியல் மூலமாக போலி யூரோ நாணயத்தாளை, மாற்றும் முயற்சி முறியடிப்பு!-

Share

ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலின்போதே
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஆணும், 45 வயதான பெண்ணும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் உண்டியல் மூலமாக இந்த போலி யூரோ நாணயத்தாளை, இலங்கை நாணயமாக வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் இயங்கும் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மூலம் இந்த போலி யூரோ நாணயத்தாள் பெறப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...