15 6
இலங்கைசெய்திகள்

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

Share

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

காலாவதியான அரிசி கையிருப்புகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் அவற்றின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுவிப்பது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான அரிசியின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுகின்ற கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுடன் இவ்வாறான செயற்படுகள் காரணமாக அப்பாவி நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தவிசாளர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...