9 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசு இலத்திரனியல் கடவுசீட்டு முறைக்கு மாறிவரும் நிலையில் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முழுமையான இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைக்கு (fully online eVisa system) மாறும் போது அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரித்தானியாவில் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் பர்மிட் (BRP), விசா வின்யெட் ஸ்டிக்கர் மற்றும் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் கார்டு (BRC) போன்ற ஆவணங்களை இலத்திரனியல் கடவுசீட்டாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3.1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் இலத்திரனியல் கடவுசீட்டு மாற்றத்தை முடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இன்னும் பலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதுடன் இதனை எளிதாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக குடியேற்ற மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் சீமா மால்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் ஆவணங்கள், 2025 மார்ச் 31 வரை சர்வதேச பயணங்களுக்கு செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலத்திரனியல் கடவுசீட்டு முறைமைக்கு மாறுவது இலவசமானது என்றும், இது பாதுகாப்பானதும் எளிமையானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், விசா கோரி தேவையற்ற ஆவணங்களை இழப்பது அல்லது மாற்றம் செய்யப்படும் அபாயம் இல்லாததையும் பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியா குடியேற்ற முறையை முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாற்றுவதற்கான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...