IMG 20211024 WA0307
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம்

Share

மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது.

நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும் மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு மண் அகழ்வு திட்டமிட்ட வகையில் இடம்பெறுகிறது. இது அரச காணிகள் அல்ல. தனியாருக்குச் சொந்தமான தோட்டக்காணிகளாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளிலும் இவ்வாறு களிமண் அகழ்வு இடம்பறுகிறது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது மருதங்கேணி பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசியல்வாதிகள் சிலரும் உடந்தையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அனுமதிப்பத்திரத்துடன் உழவியந்திரங்களில் களிமண் அகழ்வில் ஈடுபட்டபோது அப்பகுதி மக்கள் தமது எதிர்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்காலிகமாக களிமண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியில் களிமண் அகழ்வினால் பாரிய கிடங்குகள் ஏற்பட்டு நீர் தேங்குமிடமாக காணப்படுகிறது. குறித்த பகுதியினை மழை காலங்களில் கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரையும் மண் அகழ்வினால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்

அத்துடன் இக் காணிகள் பாரியளவில் மண் அகழப்பட்டு அருகில் உள்ள அணைகளால் உவர் நீர் விவசாய நிலங்களுக்குள் உட்புந்து வயல் நிலங்கள் உவராகி வயல் விதைப்புக்களையும் செய்ய முடியாது கைவிட்டுள்ளனர்.

எனவே தமது விவசாய நிலங்களை பாதுகாக்குமாறும், மேய்ச்சல் தரைகளை இல்லாதொழிக்கும் இத் திட்டத்தை உடன் கைவிடுமாறும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

IMG 20211024 WA0346

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...