22 7
ஏனையவை

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

Share

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Harini Amarasuriya) முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கள் பிரதமரின் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் பெற்ற 655,289 விருப்பு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார்.

இதேவேளை, விஜித ஹேரத் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக கம்பஹா மாவட்டத்தில் இருந்து விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெறுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது, தமிழ் மொழியில் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) சத்தியபிரமாணத்தை செய்துகொண்டார்.

மேலும், சுனில் ஹதுன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...