7 29
ஏனையவை

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

Share

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசனுக்கு (Mano Ganesan) தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் (14.11.2024) இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

கொழும்பு (Colombo) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படுவதாக மேலும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 11 1
ஏனையவை

இலங்கைத் தேயிலை ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சி: 2025-இல் வருமானம் 1.4 பில்லியன் ரூபாயால் உயர்வு!

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மற்றும் அதனூடான...

cq5dam.thumbnail.cropped.750.422
ஏனையவை

வெனிசுலா சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்: அமெரிக்காவை விமர்சிக்கும் பாப்பரசர் 14 ஆம் லியோ!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர்...

1000646441 1170x658 1
ஏனையவை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்கு எம்.ஏ. சுமந்திரன் திடீர் விஜயம்: பிள்ளையார் ஆலய நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்வு!

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பிள்ளையார் ஆலயத்தின் சிதைவுகள் மற்றும் அங்கு...

images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக...