1 31
உலகம்

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

Share

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் இருக்கும்போது ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் கைது
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் மதுபோதையில் இருப்பதாக கூறப்படும் நபர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்த அவர், உடனடியாக தண்டவாளத்தில் இருந்து காரை இறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், தண்டவாளத்தில் கார் சிக்கியது. இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் உதவியுடன் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த நபர் காரை ஓட்டி தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...