1 13
இலங்கைசெய்திகள்

பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள்

Share

பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிகளவான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 966 பேர் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 567 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களைச் சேர்ந்த 399 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,765,351 ஆகும்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 19 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 902 பேர் போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 528 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 374 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,881,129 ஆகும். பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...