4 6
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கெடுபிடி அதிகம்

Share

அநுர அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கெடுபிடி அதிகம்

இந்த நாட்டில் ஜனாதிபதியோ அல்லது எந்தவொரு அமைச்சரோ பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின் படி பயன்படுத்த முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயற்படவேண்டும். அரசியல்வாதி சட்டத்துக்குக் கீழ்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரிகமான சட்டத்தில் இருக்கவேண்டும்.

பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியிலிருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள், சில வாகனங்களைப் பார்த்தால் அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாசாரம்.

எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கின்றோம். நாம் அதை செய்கின்றோம்.

இந் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை தத்தமது விருப்பத்தின்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எமக்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

ஜீவன் தொண்டமானுக்கு இன்று திருப்பத்தூரில் திருமணம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின்...

aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...