5 8
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு

Share

அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தலைமை இலங்கையின் ஆட்சியை சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வருகையின் ஊடாக அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவு மாற்றமடையும்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கு இடையில் இருந்த உறவு இருந்தததனை விடவும் நெருக்கடியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

அத்துடன் ட்ரம்ப் ஜனாதிபதியாகியதன் ஊடாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....