6 6
இலங்கைசெய்திகள்

அநுர அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும் – நாமல் ராஜபக்ச

Share

அநுர அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும் – நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையெனில் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விடவும் மொட்டுக் கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....