5 7
இலங்கைசெய்திகள்

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும்! முன்வைக்கப்பட்ட கருத்து

Share

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும்! முன்வைக்கப்பட்ட கருத்து

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, முன்னாள் அரசாங்கத்தின் கீழ், இலங்கை அதன் நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், முழுமையாக மீள இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, அரசாங்கம் பாதீட்டை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை தாமதமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமானத்தை அதிகரிக்கவும், செலவினங்களைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் கோருகிறது நல்லாட்சி மூலம் தேசத்தை அபிவிருத்தி செய்ய உதவும் ஒரு முறையான செயல்முறையை அந்த நிதியம் கோடிட்டு காட்டியுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் என்ன சாதித்துள்ளது என கேள்வி எழுப்பிய ரோசி சேனாநாயக்க, அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...