24 6729f19406435 1
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Share

வெளிநாட்டில் இருந்து திருகோணமலைக்கு வருகை தந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் திருகோணமலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இன்று (05.11.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி (63வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

வெளிநாட்டில் இருந்து இன்று அதிகாலை வருகை தந்த குறித்த பெண் வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்ட சந்தேகநபர் தனியார் மருத்துவமனையின் உரிமையாளின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி சந்தேகநபர் திருகோணமலை தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...