11 3
இலங்கைசெய்திகள்

பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை

Share

பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கம்பஹா – கொழும்பு மற்றும் கொழும்பு – கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் என கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு சாரதிகளும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வீதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கிரில்லவல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் நிறுத்தி சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன கொடிகாரவின் பணிப்புரைக்கு அமைய, கடவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமார ஹெட்டியாராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...