1 59
இலங்கைசெய்திகள்

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம்

Share

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

 

ஆனால், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.

 

ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயங்களில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார். பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார். ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறினார்.

 

இது தான் உண்மையான நிலைமை. பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக் கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...