22 17
இலங்கைசெய்திகள்

இலங்கை விமானப்படைக்கு கிடைக்கவுள்ள புதிய கண்காணிப்பு விமானம்

Share

இலங்கை விமானப்படைக்கு கிடைக்கவுள்ள புதிய கண்காணிப்பு விமானம்

அவுஸ்திரேலியாவின் (Australia) ரோயல் அவுஸ்திரேலியன் விமான படை Royal Australian Air Force பயன்படுத்திய Beechcraft King கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இது, விமானப்படை – இலக்கம் 03 என்னும் கடல்சார் படையுடன் இணைக்கப்பட்ட கடமைகளை ஆரம்பிப்பதற்காக பயன்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தில் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மானியமாக இந்த விமானம் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள், சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் மனித கடத்தல்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...