22 15
இலங்கைசெய்திகள்

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

Share

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது என  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். (இண்ட்சிறி பெர்ரி சேர்விஸ் (IndSri Ferry Service Pvt – இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை வழங்கும் நிறுவனம்)

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இவர்,

“இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக இயங்குகிறது.

இந்த படகு சேவையானது வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.

குறித்த சிவகங்கை பயணிகள் கப்பல், 2023 ஒக்டோபர் இல் இரு நாடுகளுக்கும் இடையேயான தனது படகு சேவையை மீண்டும் ஆரம்பித்தது.

மேலும், சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2024 ஒகஸ்ட் 16 அன்று அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும்போது அதற்கான பிரயானசீட்டக்களை இணையம் பதிவு செய்யலாம்.

படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடுகட்ட இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

அத்தோடு முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் இந்த சேவையில் காணப்படுகின்றன.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...