22 15
இலங்கைசெய்திகள்

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

Share

கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறும் பயணிகளுக்கு விசேட சலுகை

கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது என  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். (இண்ட்சிறி பெர்ரி சேர்விஸ் (IndSri Ferry Service Pvt – இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவை வழங்கும் நிறுவனம்)

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இவர்,

“இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையேயான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக இயங்குகிறது.

இந்த படகு சேவையானது வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்.

குறித்த சிவகங்கை பயணிகள் கப்பல், 2023 ஒக்டோபர் இல் இரு நாடுகளுக்கும் இடையேயான தனது படகு சேவையை மீண்டும் ஆரம்பித்தது.

மேலும், சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2024 ஒகஸ்ட் 16 அன்று அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்திய மற்றும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும்போது அதற்கான பிரயானசீட்டக்களை இணையம் பதிவு செய்யலாம்.

படகுச் சேவையை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்காக, நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடுகட்ட இந்திய அரசு ஒரு வருடத்திற்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்குகிறது.

அத்தோடு முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பை விரிவுபடுத்துவதற்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூடுதல் வழிகள் மற்றும் சேவைகளை ஆராயும் திட்டங்கள் இந்த சேவையில் காணப்படுகின்றன.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...