14 15
இலங்கைசெய்திகள்

74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி

Share

74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி

கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை நாசப்படுத்தியதாக கூறுவதை தாம் ஏற்கவில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் ஊழல், மோசடிகள் தொடர்பான எந்தவொரு விடயத்திலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை நல்ல ஏற்பாடுகள் இருந்தாலும், ஊழல் மோசடிகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் எத்தனை விதிகள் நிறைவேற்றப்பட்டாலும், உயர் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் இந்தச் சட்டங்களைப் புறக்கணித்து ஊழல், மோசடிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.

இந்தநிலையில்;, தனது ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான மோசடி, ஊழல் சம்பவங்கள் நடக்கவிடவில்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர் நல்லவராக இருக்கும் வரை ஒரு நாடு எப்போதும் வளர்ச்சியடையும். எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் மத்தியில், நாட்டின் சொத்துக்களை திருடவோ, அழிக்கவோ, கொள்ளையடிக்கவோ கூடாது என்ற உண்மையான எண்ணம் இருக்க வேண்டும்.

பின்னர் இந்த எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது சாராயம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

பிரசாரத்திற்கு நல்ல பேருந்துகள் மற்றும் நல்ல மதிய உணவு பொட்டலங்கள் தேவை. அதுவும் ஊழல் என்ற வகுதிக்குள்ளேயே அடங்கும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...