15 12
உலகம்செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

Share

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அதி முக்கிய படையை களமிறக்கும் இஸ்ரேல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் வடக்கு எல்லை பிராந்தியத்தில் “கோலானி படையணியை”(Golani Brigade) களமிறக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் கோலானி படையணி சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பிறகு, தற்போது அந்த அமைப்பு தலைமை இல்லாத அணியாக காணப்படுகின்றது.

எனினும் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா மேற்கொள்ளும் தாக்குதல் அதன் திறன்களை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதாக போரியல் வல்லுநர்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரையில், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எச்சரிக்கைகளை கையாளும் நோக்குடன் இஸ்ரேல் கோலானி படையணியை லெபனான் எல்லையில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தெற்கே கோலானி படையணியின் இராணுவத்தளமொன்றை நிறுவுவதற்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...