25 6
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

Share

அனுரகுமாரவிடம் கையளிக்கப்பட்ட பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம்

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம், பாகிஸ்தான் ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் இலங்கையுடனான தனது நாட்டின் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பின் ஒரு பகுதியாக, உயர்ஸ்தானிகர் அஜீஸ், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் வாழ்த்துக் கடிதத்தை இலங்கை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை பாகிஸ்தானிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இலங்கையுடனான அதன் நெருங்கிய உறவுகளை ஆழமாக மதிக்கிறது. அத்துடன், இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜனாதிபதி சர்தாரி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...