26 4
இலங்கைசெய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

Share

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சுயேட்சை குழுக்கள், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 08க்கு இடையில் தங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

இதன்படி மட்டக்களப்பு (22), யாழ்ப்பாணம் (22), திகாமடுல்ல (37), திருகோணமலை (17) மற்றும் கொழும்பு (17) ஆகிய மாவட்டங்களில் அதிகளவு குழுக்கள் வைப்புகளை செய்துள்ளன.

இதுவரை , மொத்தம் 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் ஆணையத்திடம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதியன்று வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வருகின்றன.

அத்துடன் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...