16 2
இலங்கைசெய்திகள்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

Share

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல குழந்தைகளுக்கு இன்னும் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால், அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அந்தந்த மாவட்டச் செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...