7 5
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் இறுதித் தீர்மானத்தை எட்டாத நிலையில் மகிந்த கட்சி

Share

பொதுத் தேர்தலில் இறுதித் தீர்மானத்தை எட்டாத நிலையில் மகிந்த கட்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் குருநாகலில் போட்டியிடவுள்ளதாக விளம்பரப்படுத்துவது வெறுமனே அரசியல் ஆதாயம் தேடும் மக்களை தவறாக வழிநடத்துவதாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...