24 66fa464be4a3f
இலங்கைசெய்திகள்

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டம்

Share

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 கேள்விகளுக்கு மாத்திரம் முழு மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக இன்று (30.09.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை மீண்டும் நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்படும் முதல் போராட்டம் இது ஆகும். இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம், அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டது.

பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதேயான பிள்ளைகளின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...