2 40
இலங்கைசெய்திகள்

அரசியல் காற்று தம்பக்கம் வீசும் வரை காத்திருந்த அநுர

Share

அரசியல் காற்று தம்பக்கம் வீசும் வரை காத்திருந்த அநுர

இலங்கை ஒரு வரலாற்று கட்டத்தில் உள்ளதாக ‘த காடியன்’ தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் வெறும் 3.8 வீத வாக்குகளைப் பெற்ற அநுரகுமார திசாநாயக்க இந்த வாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த அநுரகுமார, தேசிய மக்கள் சக்திக்கும் தலைமை தாங்குகிறார்.

1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. இதன்போது, பாரிய வன்முறைகள் ஜே.வி.பி மற்றும் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், புரட்சிகர மார்க்சிச – லெனினிசம் மற்றும் சிங்கள இன – தேசியவாதம் ஆகியவற்றின் கலவையிலிருந்து ஜேவிபி கட்சி வெகுதூரம் வந்து, மையவாத பிரதான நீரோட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

நாட்டின் தெற்கே கிராமப்புறங்களில் அதன் வேர்களில் இருந்து, கட்சி புறநகர் மற்றும் சிறிய நகரங்களில் அதன் தளத்தை மீண்டும் உருவாக்கியது. அத்துடன் ஊழலின் பிரச்சினையை கையில் எடுத்து நடுத்தர வர்க்கத்தை கூட கவர்ந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...