5 36
இலங்கை

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

Share

அரசாங்கத்தின் நோக்கம் என்ன..! வெளிப்படையாக தெரிவித்தார் பிரதமர் ஹரினி

அரச சேவையை அரசாங்கம் ஒருபோதும் அற்பமானதாகக் கருதுவதில்லை என்று கூறிய பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya), அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ஊழியர்களிடையே உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டை அபிவிருத்தி செய்ய மக்களின் நம்பிக்கை தேவை

பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

“அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான பொது நம்பிக்கையே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது, அது நம் நாட்டில் இல்லை.

அரசியல்வாதிகள் மற்றும் பொது சேவைகள் மீது மக்களுக்கு எதிர்மறையான அணுகுமுறை உள்ளது. அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவைகள் பயனற்றவை என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவை அற்பமானது என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

வலுவான, திறமையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொது சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...