CORONA 1
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் உயரும் கொரோனாப் பலி

Share

ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

எனினும், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயங்கி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு புதிதாக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய கடந்த 12ஆம் திகதி ஒரே நாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 973 பேர் உயிரிழந்தனர்.

ரஸ்யாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு இது எனப் பதிவாகியிருந்த நிலையில், தற்போது, மீண்டும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இதன்படி, கொரோனாத் தொற்றுக்குள்ளாகி ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்மை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...