16 17
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

Share

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (18.09.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, பெற்றோர், சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளடன் பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றினையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்ட களத்திற்கு, பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

குறித்த பரீட்சை ஆரம்பமாக சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட மாதிரிதாள் ஒன்றை வட்ஸப் செயலியில் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image aa5ec14948
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு: ‘பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது, புதிய தீர்வுக்கு ஒத்துழைப்பு தேவை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக்...

image 8788205535
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை அகற்றம்: ‘இது இன மோதல் அல்ல, பொலிஸாரே மோசமாக நடந்துகொண்டனர்’ – கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர்!

திருகோணமலைக் கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திலும், பின்னர் அச்சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு...

Anura Kumara Dissanayake and Sajith Premadasa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடகங்களை நிறுத்திவிட்டுப் பதில்களையும் தேர்தலையும் நடத்துங்கள் – சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் வெளியிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக...

images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...