6 23
இலங்கைசெய்திகள்

நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் : மகிந்தவிடம் கோரிக்கை விடுத்த உயர்மட்ட பிக்கு

Share

நாமலை போட்டியில் இருந்து விலக்குங்கள் : மகிந்தவிடம் கோரிக்கை விடுத்த உயர்மட்ட பிக்கு

ரணிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாமலை போட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு மகிந்தவிடம் உயர்மட்ட பிக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற பௌத்த மாநாட்டின் போதே தொடம்பஹல ராகுல தேரர் ( Rahula Thero ) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே. எங்கு வேண்டுமானாலும் சொல்வேன் என்று ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்கவை எதிர்ப்பதும் ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதும் நாட்டின் உண்மையான மதம், பாதுகாப்பு மற்றும் மொழிக்கு எதிரானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,சரியான முடிவை எடுப்பதும், தனது மகனின் வேட்புமனுவை தேர்தலில் இருந்து விலக்குவதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு உண்மையான தலைவர் மற்றும் தேசபக்தர் என்றால், இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் நாட்டுக்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் ராகுல தேரர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...