wimal
செய்திகள்இலங்கை

‘மாகாணசபை இந்தியாவின் குழந்தை’ – பிறப்பு சான்றிதழ் வழங்கினார் விமல்!

Share

“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா விசேடமாக அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. வழமைபோல கோரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்கவில்லை. நாட்டு மக்கள் நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமா அல்லது தேர்தல் முக்கியமா என சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை – முதலிடம் வழங்கப்பட வேண்டும்.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...