2 21
இலங்கைசெய்திகள்

வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம்

Share

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் யாழ்ப்பாணம் (Jaffna) – காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) – பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வலயங்களும் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரால் ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியால் இதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்க கூடிய ஏற்றுமதி செயலாக்க வலயத்திற்கு கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் (Canada Sri Lanka Business Conversation) முதலீட்டை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.

இந்த வலயத்திற்கான ஆரம்பக்கட்ட காணி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் (100 MN USD) முதலீடு செய்யப்படுகிறது.

அத்துடன் ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் (1.5 BILL USD) முதலீட்டில் பாரிய செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் சுகாதார மேம்பாடு, முதியோர் இல்ல அபிவிருத்தி, தொழிற்துறை, தொழில்நுட்பவியல், சிறு வர்த்தகத் துறை மேம்பாடு, வரிவிலக்களிக்கப்பட்ட அங்காடி தொகுதி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமைப்படுத்தப்பட்ட அரச தனியார் முதலீட்டு திட்டமாக இது அமையவுள்ளது.

இந்த திட்டத்தில் கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினருடன் இலங்கை முதலீட்டு சபையும் கைகோர்த்துள்ளதுடன் கிளிநொச்சி பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் அனைத்து செயற்பாடுகளும் இலங்கை முதலீட்டு சபையினால் உள்ளூர் ஏற்றுமதி, உற்பத்தி துறையினரை கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வலயத்திலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் தொழில் இன்மை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும், பொருளாதார மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக இது அமையும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தின் போது வேலையற்ற பட்டதாரிகள், இளைஞர், யுவதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்திலுள்ள ஆளணி வெற்றிடங்களை பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ள போதிலும், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...