5 21
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை தடுக்க நடவடிக்கை

Share

வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை தடுக்க நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் 18ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகும் முடிவடையும்.

இந்த காலப்பகுதியில் பிரசாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்து அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பிரசாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை தடுப்பதற்கான அமைப்பையும் தேர்தல் ஆணையம் தயாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 213
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெதுரு ஓயா துயரம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – அனைத்து உடல்களும் மீட்பு!

குருநாகல், கோபேகானே பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானவர்களில் எஞ்சியிருந்த...

world 212
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்...

world 211
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூபவாஹினி கூட்டுத்தாபன முறைகேடு வழக்கு: சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவருக்குப் பிணை!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (SLRC) நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதன்...

world 210
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்? டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 10 நாள்...