Train
செய்திகள்இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக இடம்பெறவுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழமையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

130 அலுவலக ரயில்கள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகள் நெருக்கடியின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிதாக பல கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....