Train
செய்திகள்இலங்கை

மாகாணங்களுக்கு இடையில் ரயில் சேவைகள்

Share

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக இடம்பெறவுள்ளன என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சேவைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வழமையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

130 அலுவலக ரயில்கள் விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணிகள் நெருக்கடியின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில், புதிதாக பல கடுகதி ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...