4 8
இலங்கைசெய்திகள்

சஜித்தால் அனுரவை தோற்கடிக்க முடியாது : கடுமையாக விமர்சித்த ரணில்

Share

சஜித்தால் அனுரவை தோற்கடிக்க முடியாது : கடுமையாக விமர்சித்த ரணில்

சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) ஒரு காலமும் அனுர குமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மஹியங்கனையில் (Mahianganai) நேற்றைய தினம் (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றத்தில் எழுந்து புறம் பேசிவிட்டு இரண்டு மூன்று நாட்களை வீணடித்து விட்டு கடைசியில் என்ன நடந்தது ?

சிலர் நினைக்கின்றார்கள் சஜித்தால் முன்னோக்கி கடந்து செல்ல முடியுமென ஆனால் சஜித்தால் முடியாது.

அத்தோடு சஜித் செய்கின்ற முட்டாள் தனமான செயற்பாடுகளால் அவர் அனுரவிற்கு உதவி செய்வாராக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...