31 1
உலகம்செய்திகள்

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

Share

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், 4,000 பேர் உயிரிழந்த ஒரு மாதத்துக்கு பிறகும், 130 பேர் உயிரிழந்த ஓராண்டுக்கு பிறகும் சடலமாக வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் தரவுகளின்படி, உலகிலேயே மக்கள் தொகையில் அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. இதன்காரணமாக, கவனிக்க ஆளில்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள் வீட்டிலேயே உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்த 37,227 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், 65 வயதுக்கு அதிகமானோர் மட்டும் 70 சதவிகிதம் பேர். 85 வயதுக்கு அதிகமானோர் 7,498 பேர், 75 முதல் 79 வயதுடையவர்கள் 5,920 பேர், 70 முதல் 74 வயதுடையவர்கள் 5,635 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதம் பேரின் சடலங்கள் மட்டுமே அக்கம்பக்கத்தினர் அளிக்கும் தகவலை தொடர்ந்து, ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 3,939 சடலங்கள் ஒரு மாதத்துக்கு பிறகும், 130 சடலங்கள் அழுகிய நிலையில் ஓராண்டுக்கு பிறகும் மீட்கப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...