3 3
இலங்கைசெய்திகள்

ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கக்கூடாது: அநுரகுமார வேண்டுகோள்

Share

ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கக்கூடாது: அநுரகுமார வேண்டுகோள்

ராஜபக்சவினர் குடும்ப ஆட்சியையே முன்னெடுத்தனர். அந்த குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரிக்கிலகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

79 வயதான மகிந்த ராஜபக்ச தமது மகனுக்காக மேடையேறுகின்றார். கடும் கஷ்டத்துடன் அவர் மேடைகளில் ஏறுகின்றார். நடக்கக் கஷ்டப்படுகின்றார். இவ்வளவு கஷ்டப்பட்டு மேடைகளில் ஏறுவதற்கான காரணம் பொதுமக்களின் நலன் கருதியா? இல்லை. தமது பிள்ளையின் வெற்றிக்காகவே.

எனவே, ராஜபக்ச குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...