11 1
இலங்கைசெய்திகள்

சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி

Share

சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பெண் அரசியல்வாதி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.

ரணில்(Ranil Wickremesinghe) மற்றும் சஜித்(Sajith Premadasa) தரப்புகளுக்கு இடையிலான முறுகல் அதிகரித்துள்ளதுடன், கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் நிலைப்பாடும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சஜித் அணியில் இருந்து வெளியேறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் உரை ஒன்றினால் அந்த அணிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சஜித் தரப்பில் இருந்து ரணில் பக்கம் தாவ பலர் திட்டமிட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதனை தடுக்கும் வகையில் சஜித் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில வாரங்கள் உள்ள நிலையில் கட்சிக்குள் குழப்ப நிலையை ஏற்படுத்தும் உறுப்பினர்களை அடையாளம் காணும் சிறப்பு வேலைத்திட்டதை சஜித் ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகும் வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக சஜித் பிரேமதாச முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

எனினும் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக சஜித் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தாவல்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த நிலையில், தலதா அத்துக்கோரளவின் உரையால், சஜித்தின் ஜனாதிபதியாகும் கனவு கலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் கடும் போட்டித்தன்மை நிலவுகிறது.

இவ்வாறான நிலையில் சஜித் அணிக்குள் ஏற்படும் புதிய பிளவுகளால் அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு அது பாரிய நன்மையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...