vijaya
செய்திகள்இலங்கை

ஆபத்தின் விளிம்பில் நாடு!!

Share

“வெளிநாடுகளின் அழுத்தங்களால் இலங்கை ஆபத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தற்போது எரிமலையின் மீது இருக்கின்றது என்றே கூற முடியும். அந்த எரிமலை எப்போது வெடித்துச் சிதறும் என்பதை எவராலும் கூற முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சீன சார்பு ஆட்சியாளர்கள் உருவான நாளில் இருந்து நாடு ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் ருவான்வெலிசேய, தலதா மாளிகை ஆகியவற்றுக்குச் சென்று நாட்டில் எந்த தேசிய வளங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது என உறுதி எடுத்துக்கொள்கின்றனர்.

அவ்வாறு கூறிய ஒரு அணி 2000ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து, பொருளாதார வளங்களை விற்பனை செய்தது. இறுதியில் அவற்றைக் காப்பாற்ற வரிசையாக வழக்குகளைத் தொடர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லங்கா வைத்தியசாலை, துறைமுகக் காணிகள், இலங்கை போக்குவரத்துச் சபை என நாட்டின் தேசிய வளங்கள் விற்பனை செய்யப்பட்டன.

வழக்குகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் பெற்றுக்கொண்டோம். இதனை அரசோ அல்லது எதிர்க்கட்சியோ செய்யவில்லை. உயிருக்கு ஆபத்து இருப்பதைக் கவனத்தில் கொள்ளாது அவற்றை நானே செய்தேன்.

கடந்த அரசின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை துறைமுத்தை சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுத்தன் நெருக்கடியை தற்போது இலகுவாகத் தீர்க்க முடியாது.

சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதால், அமெரிக்காவும் தனக்கும் அது வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

இலங்கை சீனாவுக்குச் சார்பான நிலைப்பாட்டில் இருக்கும் அவரை, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விடுபட முடியாது” – என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...