dddal
இலங்கைசெய்திகள்

சம்பள பிரச்சினைக்கு வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு

Share

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வரைபு சமர்ப்பிக்கப்படும்போது தீர்வு குறித்து நிதி அமைச்சரால் தெளிவாக அறிவிக்கப்படும்.

இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்று காரணமாக நாட்டில் கல்வித்துறை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஆசிரியர்களால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிபர் ஆசிரியர்களின் நீண்ட கால சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்க அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு– செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...