9 33
இலங்கைசெய்திகள்

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

Share

டயானா மீதான போலி ஆவண குற்றச்சாட்டு: நீதிமன்றின் உத்தரவு

சட்டவிரோத இரட்டைக் குடியுரிமைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா (Diana Gamage) கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் டயானா கமகேவை முன்னிலைப்படுத்திய போது மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தவறான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை மற்றும் சட்டவிரோத இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர், டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டின் பேரில் டயானாவின், நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...